ADDED : மே 30, 2025 11:32 PM

பெலகாவி:மனைவியின் கொடுமை தாங்க முடியாமல், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெலகாவி, அன்கோலில் உள்ள ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் சுனில் மூலிமணி, 33. இவர் தன் வீட்டின் அருகே உள்ள சிவசக்தி காலனியில், கணினி பழுதுநீக்கும் கடையை நடத்தி வந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பூஜா, 29, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாகவே, தம்பதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது பூஜாவுக்கு ஆதரவாக, அவரது குடும்பத்தினரும், சுனிலை கண்டபடி திட்டினர்.
தன் பங்கிற்கு கடந்த சில நாட்களாக, சுனிலை பூஜாவும் கொடுமை செய்து வந்துள்ளார். இதனால், மனமுடைந்த சுனில் நேற்று தன் கடையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உத்யோபாக் போலீசார், சுனில் சடலத்தை மீட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், 'தன் இந்த முடிவுக்கு மனைவி, மாமனார், அவரது வீட்டாரே காரணம்' என, சுனில் எழுதி வைத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.