/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
கியாரண்டி
கடந்த 2024 ஏப்ரல் 11ம் தேதியன்று, 14,866 ரூபாய் செலுத்தி, காரின் அனைத்து விதமான பழுதுகளை சரி செய்து கொள்ளும் கியாரண்டியை நீட்டித்துக் கொண்டார். 2024 அக்டோபர் 25ம் தேதி, காரில் பயணம் செய்தபோது, பிரேக் பெயிலானது. உடனடியாக நிறுத்திய அவர் பேனட்டை திறந்து பார்த்தபோது, தீப்பிடித்திருந்தது. தீயை அணைத்துவிட்டு, சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றார்.
அதிருப்தி
நுகர்வோர் தீர்ப்பாயம் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, வேறு நபருக்கு காரை விற்றது தெரிந்தது. இதனால் அதிருப்தி அடைந்த தீர்ப்பாயம், 'அசையும் மற்றும் அசையா சொத்துகளை விற்ற பின், அதன் மீதான உரிமை, சொத்துகளை வாங்கியவருக்கு இடம் மாறும்; விற்றவருக்கு எந்த உரிமையும் இருக்காது. மனுதாரர் காரை விற்றுள்ளார். தனக்கு சொந்தமில்லாத சொத்துக்காக சட்டப்போராட்டம் நடத்த முடியாது என்பது பொது விதிமுறை. ஆனால் மனுதாரர் சட்டவிரோதமாக, ஹூண்டாய் நிறுவனத்திடம் நிவாரணம் பெற முயற்சித்துள்ளார். தவறான நோக்கத்துடன் புகார் அளித்து, தீர்ப்பாயத்தின் நேரத்தை வீணாக்கியுள்ளார்' என, அதிருப்தி தெரிவித்தது.


