/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாமியாருடன் மருமகன் ஓட்டம் போலீசில் மாமனார் புகார் மாமியாருடன் மருமகன் ஓட்டம் போலீசில் மாமனார் புகார்
மாமியாருடன் மருமகன் ஓட்டம் போலீசில் மாமனார் புகார்
மாமியாருடன் மருமகன் ஓட்டம் போலீசில் மாமனார் புகார்
மாமியாருடன் மருமகன் ஓட்டம் போலீசில் மாமனார் புகார்
ADDED : ஜூன் 27, 2025 11:18 PM
தாவணகெரே: 55 வயது மாமியாருடன், 25 வயது மருமகன் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், முத்தேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவி இறந்ததால் 13 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தா, 55, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சாந்தா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணேஷ், 25, என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவரை மூத்த மகள் ஹேமாவுக்கு திருமணம் செய்து வைத்தால், வீட்டோடு மருமகனாக இருப்பார் என, கணவர் நாகராஜை நம்ப வைத்தார்.
அன்று முதல் கணேஷ், இவர்களின் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கும் மூத்த மகள் ஹேமாவுக்கும் சமீபத்தில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.
திருமணமான 15 நாட்களில், கணவரின் மொபைல் போனை தற்செயலாக ஹேமா பார்த்தார். அதில் அவரும், சாந்தாவும் ஆபாசமாக இருக்கும் படங்கள், வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் இருவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருப்பது, வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த படங்கள், வீடியோக்களை ஹேமா, தன் தந்தை நாகராஜுக்கு அனுப்பினார். அவரும் அதிர்ச்சி அடைந்தார். தங்களின் சாயம் வெளுத்ததை அறிந்த சாந்தா, வீட்டில் இருந்த பணம், தங்க நகைகளை திருடிக்கொண்டு, கணேஷுடன் யாரும் எதிர்பாராத வேளையில் வெளியேறிவிட்டார்.
இதுகுறித்து, சென்னகிரி போலீஸ் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்துள்ளார்.