Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுமி பலி

ADDED : ஜூன் 11, 2025 08:12 AM


Google News
Latest Tamil News
சூர்யா நகர் : பெங்களூரு ரூரல் ஆனேக்கல் நாராயணகட்டா கிராமத்தில் வசித்தவர் தனிஷ்கா, 11. தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த சிறுமி, வீட்டின் முன் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் இருந்த மின்கம்பம் அருகில் சென்றபோது, அறுந்து கிடந்த ஒயரை தன்ஷிகா தொட்டு விட்டாள். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. துாக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி உயிரிழந்தார். பெஸ்காம் ஊழியர்கள் அலட்சியத்தால் தனிஷ்கா பலியானதாக பெற்றோர், கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறினர். சூர்யாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us