/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை
இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை
இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை
இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணத்திற்கு தடை
கண்களுக்கு விருந்து
இந்த வகையில், யஷ்வந்த்பூர் - கார்வார் இடையே, திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும், 16515 என்ற எண் உள்ள ரயிலில் பயணம் செய்வதற்கு, பலரும், மாத கணக்கில் தவம் இருப்பர். மறு மார்க்கத்தில், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள், 16516 என்ற எண் ரயில் கார்வாரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு வரும்.
ஜாலி பயணம்
வழி நெடுகிலும், மலைகளை குடைந்து அமைக்கப்பட்டுள்ள 57 சுரங்க பாதைகளை கடந்து செல்வது தனி உற்சாகத்தை அளிக்கும். சிறியது முதல், பெரியது வரை என மொத்தம் 109 பாலங்களை காணலாம். பாலத்தில் கீழ் சிறிய சிறிய ஓடைகளில் தண்ணீர் பாய்ந்து செல்வதை பார்க்கலாம்.
தமிழர்கள் அதிகம்
குளிர் மற்றும் மழை காலங்களில் செல்லும் போது, வழி நெடுகிலும் ஆங்காங்கே மலைகளின் மீது அருவிகளை பார்க்கலாம். இதற்காகவே இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விடுவர்.
நவ., 1 வரை தடை
சக்லேஸ்பூரில் இருந்து சுப்பிரமணியா சாலை வரை மலை பகுதி என்பதாலும், டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பாதுகாப்பு மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நடத்தப்பட உள்ளதால், இந்த ரயில் ஜூன் 1ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை இயக்கப்படமாட்டாது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
ரயில் சேவை
மேலும், மழை காலத்தில் தான் ஆங்காங்கே அருவிகள் உருவாகும் என்பதால், அதே நேரத்தில் ரயில் சேவை நிறுத்தப்படுவதால், தமிழக பயணியர் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம்.