Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.சி., கணக்கெடுப்பு பணி: வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

எஸ்.சி., கணக்கெடுப்பு பணி: வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

எஸ்.சி., கணக்கெடுப்பு பணி: வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

எஸ்.சி., கணக்கெடுப்பு பணி: வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

ADDED : ஜூலை 04, 2025 11:18 PM


Google News
பெங்களூரு: எஸ்.சி., கணக்கெடுக்கும் பணியில் அலட்சியமாக செயல்பட்ட வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் எஸ்.சி., சமூகத்தினரை கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளின்போது வீடுகளின் முன்புறங்களில் ஸ்டிக்கர்களை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினர். வீட்டில் உள்ள நபர்களிடம் தகவலை கேட்காமல் இருப்பது, கணக்கெடுப்பு நடத்தாமல் ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணிகளின்போது அலட்சியமாக செயல்பட்ட மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று பெங்களூரு கிழக்கு மண்டலத்தின் வசந்த் நகர் துணைப்பிரிவில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us