/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை
குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை
குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை
குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை

வெள்ளம்
சமீப நாட்களாக உத்தரகன்னடாவில் பரவலாக கனமழை பெய்ததில், கங்காவளி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வாகனத்தில் செல்லும் பயணியர், பாலத்தில் வாகனத்தை நிறுத்தி பாலத்தின் மீது ஏறி நின்று, போட்டோ, செல்பி எடுக்கின்றனர். இத்தகைய மக்களை கண்காணிக்க, போலீசார், கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.
ஆடியோ
இதை கண்காணிப்பு கேமரா வழியாக கவனித்த போலீசார், ஆடியோ மூலம் தம்பதியை எச்சரித்தனர். 'பாலத்தின் கீழே ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. உடனடியாக அங்கிருந்து செல்லுங்கள்' என, உத்தரவிட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் திடீரென போலீசாரின் குரல் கேட்டதும், வெலவெலத்த தம்பதி, போலீசாரின் உத்தரவுபடி குழந்தையை துாக்கி கொண்டு அங்கிருந்து பறந்தனர்.
ஆபத்து தவிர்ப்பு
இத்தகைய கேமராக்கள், சுற்றுலா தகவல் மையம் மற்றும் கோகர்ணா போலீஸ் நிலையத்துக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகன்னடா போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், நேரவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் குழந்தை தவறி ஆற்றில் விழும் அபாயம் இருந்தது.