Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மது விருந்தில் ஒருவர் அடித்துக்கொலை

மது விருந்தில் ஒருவர் அடித்துக்கொலை

மது விருந்தில் ஒருவர் அடித்துக்கொலை

மது விருந்தில் ஒருவர் அடித்துக்கொலை

ADDED : செப் 20, 2025 11:02 PM


Google News
கலபுரகி: குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கலபுரகி நகரில் வசித்தவர் சாந்த் சாப், 45. இவரது மனைவி டில்லியில் வசிப்பதால், சாந்த் சாப் தனியாக இருந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் மாலை நண்பர்களுடன், மது விருந்து நடத்துவார்.

அதேபோன்று, நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் மது விருந்து நடத்தினார். நள்ளிரவு வரை விருந்து நடந்தது. அனைவரும் போதையில் இருந்தனர். அப்போது ஏதோ காரணத்தால், இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. கைகலப்பில் ஈடுபட்டனர். இவ்வேளையில் நண்பர்கள், சாந்த் சாபை நிர்வாணமாக்கி, உருட்டுக்கட்டையால் கண் மூடித்தனமாக அடித்தனர். அவர் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்து தப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த கலபுரகி நகர் போலீசார், உடலை மீட்டனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை கலபுரகி நகர போலீஸ் கமிஷனர் சரணப்பா, நேற்று பார்வையிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us