
அதிகாலை
இந்த பயிற்சியின் போது, தன் எவ்வளவு கஷ்டமான விஷயத்திற்கு ஆசைப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டார். இருப்பினும், சிறு வயதிலே கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பயிற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்தார்.
பரிசுகள்
இவர், கடந்த சில ஆண்டுகளாக நடந்த மாவட்ட, மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள், பரிசுகளை வென்று உள்ளார். இந்த ஆண்டு மாநிலத்தை தாண்டி ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த யோகா போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றி பெற்றார். குறிப்பாக, யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் 2025ல் பங்கேற்று வெள்ளி பத்தகம் பெற்றார். இவர் செய்த பாக்ஸ் யோகா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாக்ஸ் யோகா என்பது ஒரு சிறிய பெட்டிக்குள் இருந்து கொண்டு, பல வகையான ஆசனங்களை செய்து காட்டுவது. இது மிகவும் கடினமான யோகா என கூறப்படுகிறது. இதற்கு காரணம், சில சமயங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.
துரித உணவு
இது குறித்து ரித்வியின் பெற்றோர் கூறியதாவது: