ADDED : மே 03, 2026 11:37 PM

ஹாசன்: கள்ளக்காதலியை அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ஜெ.பி., நகரில் வசித்தவர் ரம்யா, 35; செவிலியர். இவரது கணவர் உமேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து, இவருக்கு ஹாசனை சேர்ந்த சந்திரா, 41, என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த மாதம் 28ம் தேதி ரம்யா, தன் மாமியார் கல்லம்மாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஹாசன் அத்திஹள்ளி கிராமத்திற்கு சென்றார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த ரம்யாவை சந்திக்க சந்திரா வந்தார். அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றார். இதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த சந்திரா, ரம்யாவின் மர்ம உறுப்பில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். எஸ்லுார் போலீசார், சந்திராவை கைது செய்தனர்.





