Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நிலத்தைத் தரமாட்டேன்! நடிகரின் மகள் பிடிவாதம்

நிலத்தைத் தரமாட்டேன்! நடிகரின் மகள் பிடிவாதம்

நிலத்தைத் தரமாட்டேன்! நடிகரின் மகள் பிடிவாதம்

நிலத்தைத் தரமாட்டேன்! நடிகரின் மகள் பிடிவாதம்

ADDED : செப் 06, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: “அபிமான் ஸ்டுடியோ இடத்தை வசப்படுத்த, அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்த்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம்,” என, மறைந்த நடிகர் பாலகிருஷ்ணாவின் மகள் கீதா பாலி தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:

உத்தரஹள்ளி - கெங்கேரி சாலையில் உள்ள, அபிமான் ஸ்டுடியோவை வனத்துறை திரும்பப் பெறும் உத்தரவு பிரதி, இன்னும் எங்கள் கைக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலத்தை வசப்படுத்தினால், நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம். என் தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை, தக்கவைத்துக் கொண்டு, அதை மேம்படுத்துவேன். இடத்தை நான் விட்டுத்தரமாட்டேன். தந்தையின் இடம், அவரது பெயரிலேயே இருக்க வேண்டும். அதை நான் விற்கமாட்டேன். என் தந்தையின் ஸ்டுடியோவை, அரசோ அல்லது வனத்துறையோ கையகப்படுத்தும் உரிமை இல்லை.

இதை ஆவணங்களுடன் நிரூபிப்பேன். இதற்கு முன்பு 10 ஏக்கர் நிலத்தை, நான் விற்கவில்லை. அதில் அரசின் கைவரிசை உள்ளது. 2003ல் முறைகேடு நடந்துள்ளது என்பதை, நான் பகிரங்கமாகவே கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us