Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஹனி டிராப்' வழக்கு இன்று விசாரணை

'ஹனி டிராப்' வழக்கு இன்று விசாரணை

'ஹனி டிராப்' வழக்கு இன்று விசாரணை

'ஹனி டிராப்' வழக்கு இன்று விசாரணை

ADDED : மார் 25, 2025 03:38 AM


Google News
பெங்களூரு : கர்நாடகாவில் நடந்த 'ஹனி டிராப்' விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இன்று இம்மனு மீது விசாரணை நடக்க உள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், இம்மாதம் 20ம் தேதி சட்டசபையில் பேசிய அமைச்சர் ராஜண்ணா, 'என்னையும் ஹனி டிராப்பில் சிக்கவைக்க சூழ்ச்சி நடந்தது' என பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி, சட்டசபையில் காகிதத்தை கிழித்து, சபாநாயகர் காதர் முன் வீசிய சம்பவத்தில், 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், 'கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள் உட்பட 48 பேருக்கு 'ஹனி டிராப்' நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

இம்மனு நேற்று தலைமை நீதிபதி சஞ்சிவ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இன்று விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us