/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
முன்கூட்டியே துவங்கிய பருவமழை: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
மலை பாதையில் நிலச்சரிவு
சிக்கமகளூரு அருகே முல்லையனங்கிரியில் உள்ள பாபாபுடன்கிரிக்கு செல்லும், மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மணல் மூட்டைகளை, பொது பணி துறையினர் அடுக்கி வைத்து வருகின்றனர். யாரும் பாபாபுடன்கிரிக்கு சுற்றுலா வர வேண்டாம் என்று, மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. இதுபோல ஹாசன் சக்லேஸ்பூர் பகுதியில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
ஆற்றில் பாய்ந்த கார்கள்
சிக்கமகளூரு மூடிகெரே தாலுகா பனகல் ராமண்ணா காந்தி, சக்கமக்கி ஆகிய இடங்களில், கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள் ஹேமாவதி கிளை ஆற்றில் பாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. கார்கள் கயிறு கட்டி வெளியே இழுக்கப்பட்டது.
சுவர் இடிந்தது
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் மங்களூரு, பன்ட்வால், புத்துார், பெல்தங்கடி பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. புத்துாரில் நகரசபை அலுவலக காம்பவுன்ட் சுவர் இடிந்து, மூன்று ஆட்டோக்கள் மீது விழுந்தது. மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
வெள்ளப்பெருக்கு
மங்களூரு டவுன் அட்டியார் பகுதியில் மழை, சாக்கடை நீர், கிணற்றில் கலந்ததால், குடிநீருக்காக கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். பெல்தங்கடியில் கனமழையால் நேத்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் பாக்கு தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாக்கு மரங்கள் அழுகும் நிலையில் உள்ளன.
விளைநிலங்கள்
வடமாவட்டங்களான ஹாவேரி, பெலகாவி, கதக்கிலும் நேற்று கனமழை பெய்தது. ஹாவேரியில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், நெற்பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. கதக், ரோன், லட்சுமேஸ்வர், முண்டரகியிலும் விளைநிலங்கள் சேதம் அடைந்தன.
பாகமண்டலாவில் வெள்ளம்
குடகில் பெய்து வரும் மழையால் பாகமண்டலா திரிவேணி சங்கமத்தில் உள்ள, மலர் தோட்டத்தை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்கு மத்தியிலும் குடகுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.