தமிழை காணோம்!
க லபுரகி ரயில் நிலையத்தில் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் பெயர் பலகை உள்ளது. கலபுரகி, கர்நாடகாவில் தான் இருக்குது. இங்கு உருது பேசுகிற மக்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறாங்களாம். இதே போல் தான் கோல்டு சிட்டியில் 80 சதவீதம் பேர் தமிழர்கள் உள்ளனர். இங்குள்ள ரயில் நிலையங்களில் இருந்த தமிழ் எழுத்துகளை அழிச்சிட்டாங்க.
காக்கிகளுக்கே சவால்!
த ங்கவயல் மாவட்ட காக்கியின் உயர்வான பெரிய ஆபீசரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிகணக்கு ஆரம்பித்திருக்காங்களாம். இவரோட கணக்குடன் தொடர்பில் இருக்கிறவங்கள எச்சரிக்கைப்படுத்துறாங்க. போலி கணக்கை ஏற்படுத்தினது யார்? அந்த நபரை கண்டுப் பிடிக்க வேணும்.
வரலாற்றை மறைக்கலாமா?
ம ண் வாரி கனரக பேக்டரியை கோல்டு சிட்டியில் ஏற்படுத்த காரணமாக இருந்தது யாருன்னு விபரம் அறிந்து பேச வேண்டுமே. யாரையோ போற்றி புகழ வேண்டும் என்பதற்காக உண்மையை மூடி மறைக்க வரலாற்றை குழி தோண்டி புதைக்கலாமா?