Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால்... வடியாத வெள்ளம்! ஆறாக மாறிய சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 21, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : பெங்களூரில் நேற்றும் தொடர்ந்த மழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. ஆறாக மாறிய சாலைகளால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இன்றும், நாளையும் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை குறித்து மாநில பேரிடர் மீட்பு குழு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், மாநில அரசு அலட்சியம் காட்டியதும் தெரியவந்துள்ளது. நடந்தே சென்றனர்

மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா, தமிழகத்தின் வடமாவட்டங்கள் இடையே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கர்நாடகாவிலும் கனமழை பெய்கிறது. குறிப்பாக பெங்களூரில் மழை வெளுத்து வாங்குகிறது.

கடந்த 17, 18 ம் தேதிகளில் இரவு முழுதும் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால், நகரம் வெள்ளக்காடானது. ஹொரமாவின் சாய் லே - அவுட் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். மழைக்கு பெண் உட்பட மூன்று பேர் பலியாகினர்.

வருண பகவான்


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் கனமழை இல்லாமல், மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஆனால் வருணபகவான் விடவில்லை. நேற்று அதிகாலை 5:00 மணி முதல் மழை பெய்ய துவங்கியது.

மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், பனசங்கரி, சாந்திநகர், ஜெயநகர், சாம்ராஜ்பேட், விஜயநகர், சந்திரா லே - அவுட், இந்திராநகர், கோரமங்களா, சுங்கதகட்டே, காமாட்சிபாளையா, மல்லேஸ்வரம், ஆர்.டி.நகர், ஜாலஹள்ளி, கம்மனஹள்ளி, ஜே.பி.நகர், சிவாஜிநகர் உட்பட நகர் முழுதும் கனமழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பெங்களூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ள, வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த எச்சரிக்கை மூலம் 6.45 செ.மீ., முதல் 11.55 செ.மீ., வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 நிலவரப்படி 1.35 செ.மீ., மழை பெய்து உள்ளது.

கடந்த 18 ம் தேதி இரவு பெய்த மழையால், சில்க் போர்டு சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்றும் சில்க் போர்டு பகுதியில் சிறிது நேரம் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியது. சில்க் போர்டு மேம்பாலத்தில் இருந்து மடிவாளாவுக்கு வரும் சாலையில், கடல் போல மழைநீர் தேங்கி நின்றது.

தண்ணீருக்குள் வாகனங்களை இயக்க பயந்து, பாலத்தின் முனையில் சிலர் வாகனங்களை நிறுத்தினர். பொம்மனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சில்க் போர்டு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பஸ்களில் வந்தவர்கள் பொறுமை இழந்து, பஸ்களில் இருந்து இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தனர்.

அரசு அலட்சியம்


பெங்களூரில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தோம் என்று துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தார். ஆனால் அரசு அலட்சியம் காட்டியது தெரிந்து உள்ளது.

அதாவது, கடந்த மாதம் 15ம் தேதி மாநில பேரிடர் மீட்பு குழு வெளியிட்ட அறிக்கையில், 'மே 15ம் தேதியில் இருந்து பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

'மாநகராட்சி, போலீஸ், குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெள்ள பாதிப்புக்கு காரணமாக மாறி உள்ளது.

3 நாள் ஆரஞ்சு அலெர்ட்

பாக்ஸ்கள்

3 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அங்கு 11.56 செ.மீ., முதல் 20.44 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உடுப்பியில் நேற்று கனமழை பெய்தது. மணிப்பால் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. டிராக்டரில் உணவு பெங்களூரு சாய் லே அவுட் குடியிருப்பில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தரைதளத்தில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு டிராக்டர், பொக்லைன் இயந்திரங்களில் உணவு, தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. பயணியர் கூட்டம்சாலையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால், பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இல்லை. பஸ்சை எதிர்பார்த்து பயணியர் காத்து நிற்பதால், பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கார், ஆட்டோ கட்டணம் உயர்வுபெங்களூரின் போக்குவரத்து சேவையில் வாடகை கார், ஆட்டோ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது மழை பெய்வதால் கார், ஆட்டோ கட்டணம் உயர்ந்து உள்ளது. பயணியர் புக்கிங் செய்து கொண்டே இருப்பதால், சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. கார், ஆட்டோ எளிதில் புக் ஆவது இல்லை.மழையில் நனைந்த மலர்கள்கே.ஆர்.மார்க்கெட்டில் தினமும் காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, மொத்த காய்கறி, மலர்கள் விற்பனை படுஜேராக நடக்கும். ஆனால் நேற்று காலையில் இருந்தே மழை பெய்ததால், மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் காய்கறி, மலர்களை விற்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர். சாலையில் ஓடிய தண்ணீர் மலர்களையும் நனைத்தது. இது தான் கிரேட்டர் பெங்களூரா?பொம்மனஹள்ளியில் வெள்ள பாதிப்புகளை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டி நேற்று ஆய்வு செய்தனர். 'இது தான் கிரேட்டர் பெங்களூரா' என்ற பதாகையை கையில் வைத்து கவனத்தை ஈர்த்தனர்.உலா வரும் மீம்ஸ்கள்பெங்களூரு வெள்ளம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் சீற்றம் எழுந்து உள்ளது. மேலும் ஆட்சியாளர்களை கிண்டல் அடிக்கும் வகையில் மீம்ஸ்களும் உலா வருகின்றன. 'இது கிரேட்டர் பெங்களூரு இல்ல, வாட்டர் பெங்களூரு; மாநகராட்சியின் புதிய மந்திரம் நீச்சல் அடித்து கொண்டு வேலைக்கு செல்லுங்கள், எரிபொருளை சேமியுங்கள்; அப்பாடா ஒரு வழியா பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்கள், மழைநீரால் மூடப்பட்டு உள்ளது' என்பது உட்பட பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.



டிராக்டரில் உணவு

பயணியர் கூட்டம்

மழையில் நனைந்த மலர்கள்

பாக்ஸ்கள்

3 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அங்கு 11.56 செ.மீ., முதல் 20.44 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உடுப்பியில் நேற்று கனமழை பெய்தது. மணிப்பால் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. டிராக்டரில் உணவு பெங்களூரு சாய் லே அவுட் குடியிருப்பில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தரைதளத்தில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு டிராக்டர், பொக்லைன் இயந்திரங்களில் உணவு, தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. பயணியர் கூட்டம்சாலையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால், பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இல்லை. பஸ்சை எதிர்பார்த்து பயணியர் காத்து நிற்பதால், பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கார், ஆட்டோ கட்டணம் உயர்வுபெங்களூரின் போக்குவரத்து சேவையில் வாடகை கார், ஆட்டோ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது மழை பெய்வதால் கார், ஆட்டோ கட்டணம் உயர்ந்து உள்ளது. பயணியர் புக்கிங் செய்து கொண்டே இருப்பதால், சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. கார், ஆட்டோ எளிதில் புக் ஆவது இல்லை.மழையில் நனைந்த மலர்கள்கே.ஆர்.மார்க்கெட்டில் தினமும் காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, மொத்த காய்கறி, மலர்கள் விற்பனை படுஜேராக நடக்கும். ஆனால் நேற்று காலையில் இருந்தே மழை பெய்ததால், மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் காய்கறி, மலர்களை விற்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர். சாலையில் ஓடிய தண்ணீர் மலர்களையும் நனைத்தது. இது தான் கிரேட்டர் பெங்களூரா?பொம்மனஹள்ளியில் வெள்ள பாதிப்புகளை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டி நேற்று ஆய்வு செய்தனர். 'இது தான் கிரேட்டர் பெங்களூரா' என்ற பதாகையை கையில் வைத்து கவனத்தை ஈர்த்தனர்.உலா வரும் மீம்ஸ்கள்பெங்களூரு வெள்ளம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் சீற்றம் எழுந்து உள்ளது. மேலும் ஆட்சியாளர்களை கிண்டல் அடிக்கும் வகையில் மீம்ஸ்களும் உலா வருகின்றன. 'இது கிரேட்டர் பெங்களூரு இல்ல, வாட்டர் பெங்களூரு; மாநகராட்சியின் புதிய மந்திரம் நீச்சல் அடித்து கொண்டு வேலைக்கு செல்லுங்கள், எரிபொருளை சேமியுங்கள்; அப்பாடா ஒரு வழியா பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்கள், மழைநீரால் மூடப்பட்டு உள்ளது' என்பது உட்பட பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.அங்கு 11.56 செ.மீ., முதல் 20.44 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உடுப்பியில் நேற்று கனமழை பெய்தது. மணிப்பால் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பெங்களூரு சாய் லே அவுட் குடியிருப்பில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தரைதளத்தில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு டிராக்டர், பொக்லைன் இயந்திரங்களில் உணவு, தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. சாலையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால், பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இல்லை. பஸ்சை எதிர்பார்த்து பயணியர் காத்து நிற்பதால், பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கே.ஆர்.மார்க்கெட்டில் தினமும் காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, மொத்த காய்கறி, மலர்கள் விற்பனை படுஜேராக நடக்கும். ஆனால் நேற்று காலையில் இருந்தே மழை பெய்ததால், மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் காய்கறி, மலர்களை விற்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர். சாலையில் ஓடிய தண்ணீர் மலர்களையும் நனைத்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us