/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்' கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'

விடுமுறை
தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும் நேத்ராவதி, பல்குனி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல உடுப்பி மாவட்டத்தில் பெய்யும் மழையால் சுவர்ணமுகி, சவுபர்ணிகா, பீமா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தடுப்பு சுவர்
மலை மாவட்டமான குடகிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, திரிவேணி சங்கமம் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது. திரிவேணி சங்கமம் பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மடிகேரியில் உள்ள ஹாரங்கி அணையின் நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
37,000 கனஅடி
சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், குதிரேமுகாவில் உற்பத்தியாகும் துங்கா ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஷிவமொக்காவின் காஜனுார் என்ற இடத்தில் துங்கா ஆற்றின் குறுக்கே அணை உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 37,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.