/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு
ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு
ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு
ரன்யா வீடு உட்பட 9 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறையும் களம் இறங்கியதால் பரபரப்பு

வலை அமைப்பு
அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளும், ரன்யா ராவிடம் இருந்து பறிமுதல் செய்த தங்கக் கட்டிகளும் ஒரே மாதிரியாக இருந்ததால், இந்த வழக்கின் பின்னணியில், பெரிய நெட்ஒர்க் இருக்கலாம் என்று, சி.பி.ஐ.,க்கு, வருவாய் புலனாய்வு பிரிவினர் தகவல் கொடுத்தனர்.
கிரெடிட் கார்டு
இதன்படி, வழக்குப்பதிவு செய்த அமலாக்க துறையினர், பெங்களூரில் ரன்யா ராவ், தன் கணவர் ஜதினுடன் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, தருணின் வீடு உட்பட ஒன்பது இடங்களில், நேற்று காலை 6:00 மணி முதல் சோதனை நடத்த ஆரம்பித்தனர். மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை; வீட்டிற்கே வரவழைத்து சாப்பிட்டனர்.
தலைமைக்கு விளக்கம்
இந்த வழக்கில் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றி கர்நாடக காங்கிரசிடம், கட்சி மேலிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'வழக்கில் எந்த அமைச்சருக்கும் தொடர்பு இல்லை. அரசியலுக்காக பா.ஜ., தலைவர்கள் பொய் சொல்கின்றனர்' என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாபஸ் ஏன்?
ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட, 'புரோட்டாகால்' சலுகை பற்றி விசாரிக்க சி.ஐ.டி.,க்கு, உள்துறை உத்தரவிட்டது. நேற்று முன்தினம் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தருணும் நடிகர்
ரன்யா ராவின் முன்னாள் காதலன் தருண் தொழில் அதிபர் மட்டும் இல்லை. அவரும் ஒரு திரைப்பட நடிகர். தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2018ல் தெலுங்கில் வெளியான, பரிச்சயம் என்ற படத்தில் நடித்து இருந்தார். சினிமாவுக்காக தனது பெயரை விராட் கொண்டரு ராஜு என்று மாற்றி உள்ளார். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. ரன்யா ராவும் அப்படி தான். அவரும் வெறும் மூன்று படங்களில் மட்டுமே நடித்து உள்ளார்.
ஜெயமாலாவுக்கு உறவு
நடிகை ஜெயமாலாவின் மகள் சவுந்தர்யா. நடிகையான இவருக்கும், ருஷப் என்பவருக்கும் கடந்த மாதம் 7ம் தேதி திருமணம் நடந்தது. ருஷப், ராமச்சந்திர ராவின் மகன் ஆவார். தனது சகோதரர் திருமணத்தில் ரன்யா ராவும் பங்கேற்றார்.
ரன்யா திருமணத்தில் சித்து
தங்கம் கடத்தலில் கைதான ரன்யா ராவுக்கும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஜதினுக்கும், கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமண வரவேற்பில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
நடிகையருக்கு பீதி
கன்னட நடிகையர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லக் கூடியவர்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவர். ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட பின், துபாய்க்கு சுற்றுலா சென்று வந்த நடிகையருக்கு பீதி ஏற்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிட்ட துபாய் புகைப்படங்களால், நமக்கும் ஏதாவது பிரச்னை வருமோ என்று ஆதங்கத்தில் அவற்றை நீக்க ஆரம்பித்து உள்ளனர்.