Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/மருந்து கரைசல் வாயிலாக வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்

மருந்து கரைசல் வாயிலாக வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்

மருந்து கரைசல் வாயிலாக வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்

மருந்து கரைசல் வாயிலாக வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்

PUBLISHED ON : ஏப் 24, 2024


Google News
Latest Tamil News
பனாமா வாடல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பொறுப்பு பி.ஏ.மோகன் கூறியதாவது:

பனாமா வாடல் நோய் வித்துகள், மண்ணில் பல ஆண்டுகளுக்கு தங்கும் தன்மை உடையது. பூஞ்சாண வித்துகள், வாழை அடி வேர் மற்றும் நீர் பாசனத்தின் மூலமாக பரவுகின்றன.

வாடல் நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள், தண்டுடன் சேருமிடத்தில், பழுத்து உடைந்துவிடும். இறுதியில் மரம் முழுதும் உலர்ந்து விடும்.

இதை கட்டுப்படுத்துவதற்கு, நோய் தாக்கிய மரங்களை வேருடன் அகற்ற வேண்டும். மரம் அகற்றப்பட்ட குழியில், 2 கிலோ சுண்ணாம்பு போட வேண்டும். எல்லா மரங்களுக்கு, 2 சதவீதம் கார்பெண்டாசிம் மருந்தினை மூன்று மில்லி அடி வேரில் துளை போட்டு செலுத்த வேண்டும். 40 கிராம் கார்போ யூரான் குருணை மருந்தினை மண் கரைசலில் நனைத்து, அடி வேர் மீது சீராக துாவ வேண்டும்.

மேலும், வாடல் நோய் அதிகளவில் காணப்படும் நிலங்களில், பூவன், ரொபஸ்டா வாழை ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி.ஏ.மோகன்,

91766 91999.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us