Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஆண்டு முழுதும் மகசூல் தரும் மிளகாய்

ஆண்டு முழுதும் மகசூல் தரும் மிளகாய்

ஆண்டு முழுதும் மகசூல் தரும் மிளகாய்

ஆண்டு முழுதும் மகசூல் தரும் மிளகாய்

PUBLISHED ON : ஏப் 17, 2024


Google News
Latest Tamil News
ஆண்டு முழுதும், மகசூல் தரும் பச்சை மிளகாய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பழனி கூறியதாவது:

காய்கறி, நெல், பழ வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆண்டு முழுதும் பச்சை மிளகாய் காய்க்கக்கூடிய செடியை சாகுபடி செய்துள்ளேன்.

இந்த பச்சை மிளகாய் செடி, சுண்டைக்காய் வேரில் ஒட்டு கட்டிய செடியாகும்.

சுண்டைக்காய் வேர்ப்பகுதி, ஆண்டு முழுதும் பசுமையாக இருப்பதால், பச்சை மிளகாய் செடியும் ஆண்டு முழுதும் மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதை, ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்தால், பச்சை மிளகாயில் ஆண்டு முழுதும் வருவாய் ஈட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: வி. பழனி, 80980 53816.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us