Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/சவுடு மண்ணிலும் வளரும் புனே அத்தி

சவுடு மண்ணிலும் வளரும் புனே அத்தி

சவுடு மண்ணிலும் வளரும் புனே அத்தி

சவுடு மண்ணிலும் வளரும் புனே அத்தி

PUBLISHED ON : ஜூன் 25, 2025


Google News
Latest Tamil News
சவுடு மண்ணில் புனே அத்தி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:

சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், புனே அத்தி செடிகளை சாகுபடி செய்துள்ளேன்.

நம்மூர் சவுடு மண்ணுக்கு, செடி வேகமாக வளர்கிறது. மகசூலுக்கு பின், செடிகளை கவாத்து செய்துவிடும் போது, செடி சற்று நிதானமாக வளர்கிறது.

மழை மற்றும் குளிர் காலங்களில், செடிகளின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது. அப்போது தான் அத்தி செடிகளில் காய்களை அதிகமாக பார்க்க முடிகிறது.

பொதுவாக அத்தி மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், வீட்டு உபயோகத்திற்கு போக, சந்தைபடுத்த சவுகரியமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி. மாதவி,

97910 82317.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us