Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/வாழை சாகுபடிக்கு இயற்கை உரம் சிறந்தது

வாழை சாகுபடிக்கு இயற்கை உரம் சிறந்தது

வாழை சாகுபடிக்கு இயற்கை உரம் சிறந்தது

வாழை சாகுபடிக்கு இயற்கை உரம் சிறந்தது

PUBLISHED ON : ஜூலை 02, 2025


Google News
Latest Tamil News
வாழை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:

மணல் கலந்த களி மண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன்.

அனைத்து விளை பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைபொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.

அந்த வரிசையில், ஆற்றங்கரை ஒட்டி சவுடு மண் நிலத்தில், கற்பூர வாழை, பூவன் உள்ளிட்ட வாழை ரகங்களை தேர்வு செய்து நட்டுள்ளேன்.

வாழை பூ பூக்கும் போது, இயற்கை ஜீவாமிர்த கரைசல் மற்றும் உரம் ஏற்றிய மண்ணை சமன் செய்யும் போது, பூக்கள் உதிர்வதை தடுக்க முடிகிறது

இதன் மூலமாக வாழை சாகுபடியில் நல்ல மகசூல் பெற முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: சு.ரமேஷ்

81109 44475






      Our Apps Available On




      Dinamalar

      Follow us