Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/இரு பருவத்திற்கு உகந்தது ஆத்துார் கிச்சிலி சம்பா நெல்

இரு பருவத்திற்கு உகந்தது ஆத்துார் கிச்சிலி சம்பா நெல்

இரு பருவத்திற்கு உகந்தது ஆத்துார் கிச்சிலி சம்பா நெல்

இரு பருவத்திற்கு உகந்தது ஆத்துார் கிச்சிலி சம்பா நெல்

PUBLISHED ON : மே 14, 2025


Google News
Latest Tamil News
ஆடி மற்றும் கார்த்திகை ஆகிய இரு பருவங்களிலும், ஆத்துார் கிச்சிலி சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், ஆத்துார் கிச்சிலி சம்பா ரக நெல்லும் ஒன்றாகும். இது, சன்ன ரகமாகும்.

நடவு செய்து, 150 நாட்களில் நெல் அறுவடைக்கு வரும். இந்த பாரம்பரிய ரக நெல், அனைத்து விதமானமண்ணுக்கும் அருமையாக வளரும்.

குறிப்பாக, ஆடி, கார்த்திகை பருவத்தில் சாகுபடி செய்தால் மட்டுமே அதிக மகசூல் கிடைக்கும். இந்த ஆத்துார்கிச்சிலி சம்பா ரக நெல்,மஞ்சள் நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

இந்த நெல்லுக்கு நோய், பூச்சி தாக்குதல்,நீர் மேலாண்மை,களை கட்டுப்படுத்தும் முறையை முறையாக கையாண்டால், ஒரு ஏக்கருக்கு, 18 மூட்டை வரையில் நெல் மகசூல் பெறலாம்.

இந்த அரிசியில், நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால், சத்துகள் நிறைந்து இருக்கின்றன. நோய்களை கட்டுப் படுத்தும் தன்மையும் உடையது.

இவ்வாறு அவர்கூறினார்.



தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,

96551 56968.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us