PUBLISHED ON : ஏப் 28, 2024

நாளெல்லாம் விழித்து
அயராது உழைத்து
நாடு செழிக்க
தன்னை ஈந்திடும்
வியர்வை மனங்களின்
திருவிழா!
சோம்பலின் இலக்கணம்
அறியா பாட்டாளிகளுக்கு
ஆராதனை கீதங்கள்
பாட வேண்டிய
தினம் இது!
உழைக்கும் வர்க்கத்தின்
உள்ளங்களில்
உவகை பொங்க
பாராட்டு தெரிவிக்க வேண்டிய
பரவச நாள் இது!
உழைப்போரின் வாழ்வியலை
படித்து முன்னேற
தீர்மானிக்க வேண்டிய
அர்ப்பண நாள் இது!
சுறுசுறுப்பில் எறும்பாய்
வாழ்வின் கரும்பாய்
நாட்டிற்கு பயனாய்
வாழ்ந்தவர்களை
நினைவு கூர வேண்டிய
பொன்னாள் இது!
விலாசம் இல்லாத
வேர்களாய்
வாழ்ந்த பலரின்
சரித்திரங்களை
அறிந்திட செய்ய
வேண்டிய நாள் இது!
உழைத்து ஓய்ந்த
உள்ளங்களை
இளைப்பாற
செய்ய வேண்டும்
இம்முடிவுக்குள்
வரவேண்டிய நாள் இது!
உழைத்தோரை பின் தொடர்ந்து
உழைப்போம் உயர்வோம்
நாட்டின் துயரங்களை
துடைப்போம்
துன்பங்களைக் களைவோம்!
— சங்கீதா சுரேஷ், தருமபுரி.
அயராது உழைத்து
நாடு செழிக்க
தன்னை ஈந்திடும்
வியர்வை மனங்களின்
திருவிழா!
சோம்பலின் இலக்கணம்
அறியா பாட்டாளிகளுக்கு
ஆராதனை கீதங்கள்
பாட வேண்டிய
தினம் இது!
உழைக்கும் வர்க்கத்தின்
உள்ளங்களில்
உவகை பொங்க
பாராட்டு தெரிவிக்க வேண்டிய
பரவச நாள் இது!
உழைப்போரின் வாழ்வியலை
படித்து முன்னேற
தீர்மானிக்க வேண்டிய
அர்ப்பண நாள் இது!
சுறுசுறுப்பில் எறும்பாய்
வாழ்வின் கரும்பாய்
நாட்டிற்கு பயனாய்
வாழ்ந்தவர்களை
நினைவு கூர வேண்டிய
பொன்னாள் இது!
விலாசம் இல்லாத
வேர்களாய்
வாழ்ந்த பலரின்
சரித்திரங்களை
அறிந்திட செய்ய
வேண்டிய நாள் இது!
உழைத்து ஓய்ந்த
உள்ளங்களை
இளைப்பாற
செய்ய வேண்டும்
இம்முடிவுக்குள்
வரவேண்டிய நாள் இது!
உழைத்தோரை பின் தொடர்ந்து
உழைப்போம் உயர்வோம்
நாட்டின் துயரங்களை
துடைப்போம்
துன்பங்களைக் களைவோம்!
— சங்கீதா சுரேஷ், தருமபுரி.