PUBLISHED ON : பிப் 09, 2025

அ நிறம் | அளவு
முகமூடி அணிந்த கொள்ளைக் காரன் ஒருவன், இரவில் தன் எதிரில் நடந்து வந்த பெரிய மனிதரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, வழிமறித்து, 'மரியாதையா உன்னுடைய பணத்தை எடு...' என்றான்.
எதற்கும் அசராதவர், அந்த மனிதர். முகமூடி கொள்ளைக்காரனைப் பார்த்து, 'இந்த மிரட்டல், உருட்டலெல்லாம் என்கிட்ட வேணாம். நான் யார் தெரியுமா? அரசியல்வாதி...' என்றார்.
'அப்படியானால் என் பணத்தைக் கொடு...' என்றான், கொள்ளைக்காரன்.
- புலவர் மா.ராமலிங்கம்





