PUBLISHED ON : மே 10, 2026

மே 10 - அன்னையர் தினம்
கருவறையில் காத்தவளை
கண்மணியெனத் தாங்கியவளை
கனிவான சொற்களாலே
கண்ணியமாகப் போற்றிடுவோம்!
பசித்த பொழுதுகளில் எல்லாம்
பாசமுடன் உணவளித்தவளை
பாச மலர்கள் துாவி
பாராட்டி வாழ்த்திடுவோம்!
உடல் சோர்வு வந்த போதும்
சொல்லாமல் உழைத்தவளின்
உணர்வுகளை புரிந்துகொண்டு
இன்சொல்லால் நெகிழ்த்திடுவோம்!
துயரம் சூழ்ந்த வேளைகளில்
துணையாக நின்றவளை
ஆறுதலான வார்த்தைகளால்
அரவணைத்துக் காத்திடுவோம்!
நாம் நோயில் வீழ்ந்தால் ஊண் உறக்கம் துறந்தவளை
நெஞ்சார்ந்த நன்றியாலே
மரியாதை செலுத்திடுவோம்!
தோல்விகள் துரத்தும் போதும்
நம்பிக்கை ஊட்டியவளை
கடைசி வர நினைவில் வைத்து
கடவுளாகப் பூஜித்திடுவோம்!
அன்னையெனும் அருந்தெய்வம்
கண்ணெதிரே உள்ளப்போதே
கலப்படமில்லா அன்புடன்
அவளுக்கு கைமாறு செய்திடுவோம்!
- வ.முருகன், விழுப்புரம் .
தொடர்புக்கு: 97156 40263.
