PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
உலக தபால் தினம்
உலகில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், தகவல் பரிமாற்றத்தில் 'தபால்' முக்கிய பங்கு வகித்தது. உலக தபால் அமைப்பு 1874ல் தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் அக்.,9ல் உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 150 நாடுகள் உள்ளன. 'மக்களுக்காக தபால்: உள்ளூர் சேவை, சர்வதேச அணுகல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இந்தியாவில் தபால் துறையின் மகத்துவம் பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக அக். 6 - 10, தேசிய தபால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.


