PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
ஹிரோஷிமா தினம்
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆக., 6ல், அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 60 கிலோ எடைமிக்க 'லிட்டில்பாய்' எனும் அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆக., 9ல் நாகசாகி மீது அடுத்த அணுகுண்டை வீசியது.