PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
துணை சபாநாயகர்
லோக்சபாவில் சபாநாயகருக்கு அடுத்து துணை சபாநாயகர் பதவி 1952ல் இருந்து பின்பற்றப்படுகிறது. பொதுவாக இப்பதவி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவருக்கு அளிப்பது வழக்கம். முதல் துணை சபாநாயகராக ஆந்திராவை சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் 1952 - 1956 வரை பதவி வகித்தார். தமிழகத்தில் இருந்து முதன்முதலாக 1980 - 1984 வரை லட்சுமணன் (தி.மு.க.,) இப்பதவியை வகித்தார். பின் 1984 - 1989ல் தம்பிதுரை (அ.தி.மு.க.,) இருந்தார். கடைசியாக 2014 - 2019லும் இப்பதவி வகித்தார். 2019 முதல் இப்பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.