PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

ஒன்றிணைந்த ஜெர்மனி, புன்னகை தினம்
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஜெர்மனி தோல்வியுற்றது. மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, கிழக்கு ஜெர்மனியை ரஷ்யா கைப்பற்றின. எல்லைக்கு நடுவே இருந்த பெர்லின் நகரமும் பிரிந்தது. 1961ல் பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. நீளம் 155 கி.மீ., உயரம் 13 அடி. 1989 அக்.3ல் சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒன்றானது.* புன்னகையால் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் விரட்டலாம். இது மனதை இன்பமாக்குகிறது. இதன் முக்கியத்துவத்தை உணரும் விதமாக அக். முதல் வெள்ளி (அக்.3) உலக புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.


