PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

பெண் அதிகாரிகள் தினம்
அதிபர், பிரதமர், அமைச்சர், எம்.பி., துாதர், சிவில் சர்வீஸ் என அரசின் உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் சர்வதேச பெண் அதிகாரிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் அமைச்சர்களாக, எம்.பி.,க்களாக இருக்கும் போது, எளிய மக்கள், சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் 193 நாடுகள் ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளாக உள்ளன. 2025 ஜன. நிலவரப்படி 25 நாடுகளில் மட்டுமே பெண் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.