PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

மணலி, மணலியைச் சேர்ந்தவர் ரமேஷ், 57. இவர், நேற்று வீட்டின் சமையல் அறைக்குள், 'டீ' போட சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த நாய்கள் குரைத்துள்ளன.
அந்நேரம், வீட்டின் சமையல் அறைக்குள், ஐந்தடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதிர்ச்சியடைந்தவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள், லாவகமாக அதை பிடித்துச் சென்றனர்.