PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

திருநின்றவூர், திருநின்றவூர், பெரிய காலனியைச் சேர்ந்தவர் கோபிநாத், 40; கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேற்று மதியம், இவரது குடிசை வீட்டில் திடீரென கரும்புகை வெளியேறி தீ கொழுந்து விட்டு எரிந்தது. குடும்பத்தினருடன் அவர் வெளியேறினார்.
அக்கம் பக்கத்தினர், அருகில் இருந்த தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி, தீயை அணைத்தனர். தீயில் 'டிவி, பேன்' மற்றும் உடைமைகள் தீக்கிரையாகின.