Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM


Google News
கரூர் நாளை நடக்கும் முப்பெரும் விழாவிற்கு, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகில் நாளை (17ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், கட்சி நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

விழாவில், துணை பொதுச்செயலர் கனிமொழிக்கு-பெரியார் விருது, பாளையங்கோட்டை முன்னாள் நகராட்சி தலைவர் சீதாராமனுக்கு- அண்ணா விருது, அண்ணாநகர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுக்கு - கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலையை சேர்ந்த மறைந்த சிவராமனுக்கு - பாவேந்தர் விருது, சட்டசபை முன்னாள் கொரடா மருதுார் ராமலிங்கத்துக்கு- பேராசிரியர் விருது, முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமிக்கு - ஸ்டாலின் விருது வழங்கப் படுகிறது.எனவே கரூர் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., கிளை நிர்வாகிகள், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள்,

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us