Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM


Google News
கோபி, கோபி அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்தார்.

கோபி அருகே சுட்டிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மேகபிரபு, 36. தனியார் நிறுவன டிரைவர்; இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கோபி அருகே, ஆண்டிபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு போன் பேசி கொண்டிருந்தார். அப்போது தடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்தார். இவரது உடல் நேற்று காலை, 6:00 மணிக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரின் சகோதரர் கலைவாணன், 39, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.