Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் தேங்கும் மழைநீரால் பயணியர் அவதி

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் தேங்கும் மழைநீரால் பயணியர் அவதி

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் தேங்கும் மழைநீரால் பயணியர் அவதி

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் தேங்கும் மழைநீரால் பயணியர் அவதி

ADDED : செப் 18, 2025 02:03 AM


Google News
Latest Tamil News

சாலையில் தேங்கும் மழைநீரால் பயணியர் அவதி



கா ஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பேருந்து நிறுத்தத்தில், சமீபத்தில் புதியதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிறுத்தத்தின் எதிரிலான சாலை மிகவும் தாழ்வானதாக உள்ளது. இதனால், சிறிய அளவிலான மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால், நிழற்குடை கட்டடத்தில் காத்திருக்கும் பயணியர் பேருந்து வரும்போது தேக்கமான மழைநீரை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் சிரமப்படுகின்றனர்.

எனவே, பழையசீவரம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டடத்திற்கு எதிரிலான தாழ்வான சாலை பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- க. சிவபெருமான், பழையசீவரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us