Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/ காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

ADDED : ஜூன் 25, 2025 07:16 PM


Google News

நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் பெண் பயணியர் அவதி


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரத்தில் இருந்து, புத்தகரம் கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண்55 என்ற அரசு பேருந்து, காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பேருந்து நிறுத்தத்தில் முறையாக நின்று செல்வதில்லை.

இதனால், இப்பேருந்தில் பயணிக்கும் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, புத்தகரம் கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண்55 என்ற அரசு பேருந்து, ரங்கசாமிகுளம் பேருந்து நிறுத்தத்தில் முறையாக நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.ரவிச்சந்திரன்,

காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us