வேகத்தடையால் விபத்து
கள்ளக்குறிச்சி திருவரங்கம் நகர், நகராட்சி சாலையில் அரசு அனுமதி பெறாமல் தனி நபர்களால் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையால் விபத்துக்குள் ஏற்படுகின்றன.
--அசோக்குமார், கள்ளக்குறிச்சி.
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் ஒரு பகுதியில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் இல்லாத பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் அனைத்தும் வெளியேற வழியின்றி குடியிருப்புகளுக்கு இடையே தேங்கி நிற்கிறது.
-சீனிவாசன், கள்ளக்குறிச்சி.