ADDED : ஜூன் 12, 2025 01:17 AM
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்
தியாகதுருகம் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் உள்ள பெரிய பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்து வருகின்றனர்.
-குமார், தியாகதுருகம்.
பயணிகள் நிழற்குடை தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-அருள், ரோடுமாமந்துார்.
கழிவு நீர் கலந்த மழை நீரால் அவதி
கள்ளக்குறிச்சி - துருகம் சாலையில், கழிவு நீர் கலந்த மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
-பாபு, கள்ளக்குறிச்சி.
மின் விளக்குள் இல்லாததால் அச்சம்
கள்ளக்குறிச்சி - பெருவங்கூர் செல்லும் ஏரிக்கரை சாலையில் தெரு மின் விளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
-ராஜாராமன், பெருவங்கூர்.
குப்பையால் சுகாதார சீர்கேடு
கள்ளக்குறிச்சி தென்கீரனுார் ஏரியில் உபரி நீர் வெளியேறும் இடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
-பாஸ்கர், தென்கீரனுார்.