ADDED : மார் 12, 2025 06:30 AM
குறுகிய பாலத்தால் விபத்து அபாயம்
வடகீரனூர் குறுகிய பாலத்தால், தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை வேண்டும்.
ஷேக் காசீம், மேல் சிறுவளுர்.
பட்டா வழங்கப்படுமா
பவுஞ்சிப்பட்டு, பழங்குடி இருளர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பத்து வருடமாக வழங்கப்படாமல் உள்ளது.
மணிகண்டன், பவுஞ்சிப்பட்டு.
வீட்டுவசதி வாரிய வீடுகள் தேவை
கள்ளக்குறிச்சி நகரில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகளை கட்டி தரவேண்டும்.
ரேவதி நாராயணன், கள்ளக்குறிச்சி
தொலைபேசி கம்பம் அகற்றப்படுமா?
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நான்கு முனை சந்திப்பில் தொலைபேசி கம்பம் ஒன்று சாலையை ஆக்கிரமித்தபடி உள்ளது.
ஹரிகேஷ்பாபு, கள்ளக்குறிச்சி