/புகார் பெட்டி /செங்கல்பட்டு/செங்கல்பட்டு: புகார் பெட்டி; மருதேரி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதிசெங்கல்பட்டு: புகார் பெட்டி; மருதேரி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மருதேரி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மருதேரி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மருதேரி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 21, 2025 08:28 PM

மருதேரி சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை மருதேரி, கருநிலம், கோவிந்தபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் -- திருப்போரூர் சாலையின் இணைப்பு சாலையான இதில் மெல்ரோசாபுரம், கோவிந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சாலை நடுவே ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ஜானகி,
சிங்கபெருமாள் கோவில்.