
'தமிழ் வர மாட்டேங்குதே!'
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் சார்பில், மதுரையில் நடந்த சித்த மருத்துவ கருத்தரங்கில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முஞ்ஜ்பரா மகேந்திரபாய் கலுபை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழா மலரை வெளியிட்டார். அமைச்சர் பேச துவங்கியது போது, 'ஏழாவது சித்த மருத்துவ திருநாள் வாழ்த்துகள்... பிற்பகல் வாழ்த்துகள்... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...' என, கொஞ்சும் தமிழில் பேசினார்.
'சுவாமிக்கு ரொம்ப குசும்பு!'
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் அட்சதையை மக்களுக்கு வினியோகிக்கும் வகையில், பொறுப்பாளர்களுக்கு அவற்றை வழங்கும் விழா மதுரையில் நடந்தது. இதில், மதுரை ஆதீனம் பேசுகையில், 'ராமன் தனக்கு கிடைத்த ராஜ பதவியை துாக்கி எறிந்து கானகத்திற்கு சென்றார். அவர் வனத்திற்கு செல்கையில் அவரது முகம், 'அன்றலர்ந்த தாமரை போல இருந்தது' என, கம்பர் கூறுகிறார்.இப்போது அப்படி கூறியிருந்தால் கம்பரை, 'தாமரை' கட்சிக்காரர் என்று கூறிவிடுவர். 'அப்போதே தாமரை தான் மலர வேண்டும் என சொல்லி விட்டார். நான் சொல்லலப்பா... நான் சொல்லி இருந்தால் வழக்கு போட்டிருப்பாங்க... கம்பரும், வேறெந்த பூவையும் சொல்லாமல், தாமரையை தான் சொல்லியுள்ளார்...' என்றார்.