sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 22, 1926

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், லெட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை ஆச்சி தம்பதியின், இரண்டாவது மகனாக 1926ல், இதே நாளில் பிறந்தவர் ராமநாதன் என்ற தமிழ்வாணன்.

தேவகோட்டையிலும், திருச்சியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர், திருச்சியில் இருந்து வெளியான, 'கிராம ஊழியன்' எனும் இதழில் மாதம், 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

பின், சென்னை வந்தவர், 'அணில்' என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதில், 'துணிவே துணை' என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தினார்.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை துவக்கிய, 'கல்கண்டு' இதழின் ஆசிரியராக, 30 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது கேள்வி - பதில் பகுதிக்கும், 'சங்கர்லால்' துப்பறியும் நாவல்களுக்கும், இன்றும் ஏராளமான வாசகர்கள் உள்ளனர்.

'மணிமேகலை' பிரசுரம் துவக்கி, ஏராளமான புத்தகங்களை வெளியிட்டார். பற்பொடி முதல் படத்தயாரிப்பு வரை பல்வேறு தொழில்களில் முத்திரை பதித்தவர், 1977 நவ., 10ல், தன் 51வது வயதில் காலமானார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us