
நல்லாட்சியாக நடக்குமா இது?
சுப்ர.ஆனந்தராமன்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: நடந்து முடிந்துள்ள
பொதுத்தேர்தல் மூலம், விவேகமுள்ள சிந்தனை சக்தி மிகுந்த மக்கள் நலன்
விரும்பும் மேன்மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில், யார்
வேண்டுமானாலும், குறுக்கு வழியில் ஓட்டு பெற்று விடலாம் என்பதே.
தி.மு.க., வெற்றியும், உண்மை நிலவரமும்!
கு.
காந்தி ராஜா, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் தி.மு.க., 39க்கு 39 என, அனைத்து லோக்சபா தொகுதிகளையும்
வென்றிருக்கிறது. ஆனால், 'இந்த வெற்றி, தி.மு.க., ஆட்சியின் சிறப்பான
செயல்பாடுகளுக்கான அங்கீகாரம்' என்று முதல்வர் அறிவித்திருப்பது
ஏற்புடையதல்ல; எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுபட்டதாலேயே இந்த வெற்றி
கிடைத்திருக்கிறது.
போலியை நம்பி மோசம் போயினர்!
சி.ஆர்.குப்புசாமி,
உடுமலைபேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மூன்றாவது முறையாக, பா.ஜ.,வின் மோடி ஆட்சிக்கு வந்தாலும்,
உ.பி.,யில் அவர் கட்சி நிறைய இடங்களை இழந்தது, தரம் கெட்ட காங்கிரஸ்
பிரசாரத்தால் தான்.