Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/செய்தி எதிரொலி/கழிவுநீர் கால்வாயில் இருந்த குடிநீர் குழாய் அகற்றம்

கழிவுநீர் கால்வாயில் இருந்த குடிநீர் குழாய் அகற்றம்

கழிவுநீர் கால்வாயில் இருந்த குடிநீர் குழாய் அகற்றம்

கழிவுநீர் கால்வாயில் இருந்த குடிநீர் குழாய் அகற்றம்

PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:-நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, உத்திரமேரூரில் கழிவு கால்வாயில் இருந்த குடிநீர் குழாய் அகற்றப்பட்டது.

உத்திரமேரூர் பேரூராட்சி, 15-வது வார்டுக்கு உட்பட்டது வேடபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, தெருக்களில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களின் மூலமாக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குள்ள ராஜி தெருவில் சேதமடைந்திருந்த கழிவுநீர் கால்வாயை அகற்றிவிட்டு, சற்று அகலமான புதிய கழிவுநீர் கால்வாய் சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டது.

அவ்வாறு கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தும்போது, அங்குள்ள குழாய் ஒன்றை தள்ளி அமைக்காமல் கால்வாயிலே விட்டுவிட்டனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், கழிவுநீர் கால்வாயில் இருந்த குடிநீர் குழாய் நேற்று அகற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us