Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/செய்தி எதிரொலி/ கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி

கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி

கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி

கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
கான்ட்ராக்டர்கள் பெயரில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே ரோடு வேலைகளை செய்வது குறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, கோவையில் அத்துறையின் இன்ஜினியர்கள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 90 சதவீத பணிகளை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு மேற்கொள்கிறது. புதிதாக ரோடுகள் அமைப்பது, ரோடுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்யும் இந்தப் பிரிவுக்கு தான், பெருமளவு நிதியும் ஒதுக்கப்படுகிறது.

இதில், ரோடு சீரமைப்பு பணிகளில பெருமளவில் முறைகேடு நடக்கிறது. சீரமைப்பு என்ற பெயரில், பணிகளை தரமின்றியும், பணியே செய்யாமலும் பணத்தை எடுத்து முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

ஒரே ரோட்டில் நடக்கும் சீரமைப்பு பணியை, 15 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில், சின்னச்சின்ன பணியாக பிரித்து வழங்கியும் முறைகேடு நடக்கிறது என்றும் கூறப்பட்டது.

தரமற்ற பணிகள்


கோட்ட பொறியாளரே, இந்த தொகையுள்ள பணிக்கு 'இ - டெண்டர்' விட்டு, பணியை இறுதி செய்யலாம் என்பதால், ௧ கோடி ரூபாய் பணியும் ஆறேழு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

இதனால், சின்னச்சின்ன கான்ட்ராக்டர்கள் பணிகளை எடுத்து, தரமற்ற முறையில் செய்கின்றனர். அதனால் தான், ரோடு சீரமைக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே கந்தலாகி விடுகிறது என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுபற்றி துறையின் செயலருக்கு, கான்ட்ராக்டர்கள் சங்கம் சார்பில் புகார் அனுப்பப்பட்டது. நம் நாளிதழிலும், 'கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் அதிகாரிகள்' என்ற தலைப்பில், ஜூன் 2 அன்று விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, இந்த முறைகேடு பற்றி விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. கோவையில் இக்குழு கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

உதவி பொறியாளர்கள்


இதன் தொடர்ச்சியாக, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கோவை கோட்ட பொறியாளர் உட்பட, அனைத்து இன்ஜினியர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னுார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறப்பு திட்டப்பிரிவு ஆகிய உதவி கோட்ட பொறியாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றி வந்த ஏழு உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது.

இதுதவிர வேறு பல இன்ஜினியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us