PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM
மேலுார், : மேலுார் சந்தைப்பேட்டை 2வது தெருவில் வசிப்பவர்களின் தோலில் தடிப்பு, அரிப்பு ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. சுகாதாரமற்ற முறையில் இருப்பவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்படும்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், வட்டார அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் டாக்டர் அருபா உள்ளிட்டோர் முகாம் நடத்தினர். அம்பலம் சிவனேசன் கூறுகையில், 'இது s teroid modified tinea corporis என்ற வகையை சேர்ந்தது. மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்து கொண்டால் ஆறு வாரங்களில் குணமாகும்' என்றார்.