PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

மேலுார் : நாவினிபட்டி மெயின்ரோட்டில் 6 மாதங்களுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு 7 நாளில் பழுதானதாக கூறி அகற்றினர்.
மின்சாரத்தை நம்பி பயிரிடப்பட்ட வாழை, கரும்பு, தென்னை கருக ஆரம்பித்தது. வீடுகளுக்கு மட்டும் பழைய டிரான்ஸ்பார்மரில் இணைப்பு கொடுக்கப்பட்டது. குறைந்த மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், செயற்பொறியாளர் கண்ணன் உத்தரவுபடி மீண்டும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.