PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

மேலுார் : மேலுாரில் மெயின் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
விபத்து அபாயமும் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக பஸ் ஸ்டாண்டில் இருந்து செக்கடி வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன், சாலை ஆய்வாளர் கார்த்திக், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்தி இசக்கி, எஸ்.ஐ., பழனியப்பன், நகராட்சி பொறியாளர் சுப்பையா, சுகாதார மேற்பார்வையாளர் பாலு, மயில்வாகனன் மேற்பார்வையில் பணி நடந்தது.