/தினம் தினம்/செய்தி எதிரொலி/ மணித்தோட்டம் கிராமத்தில் புதிய மின்கம்பங்கள் அமைப்பு மணித்தோட்டம் கிராமத்தில் புதிய மின்கம்பங்கள் அமைப்பு
மணித்தோட்டம் கிராமத்தில் புதிய மின்கம்பங்கள் அமைப்பு
மணித்தோட்டம் கிராமத்தில் புதிய மின்கம்பங்கள் அமைப்பு
மணித்தோட்டம் கிராமத்தில் புதிய மின்கம்பங்கள் அமைப்பு
PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் - எல்.எண்டத்தூர் சாலை, மணித்தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் வகையில், மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றியை தாங்கி பிடிக்கும் நான்கு மின்கம்பங்களில், முன் பக்கம் உள்ள இருமின்கம்பங்களில் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்ததால், பலத்த காற்றுடன் மழை பெய்தால், சிதிலமடைந்த மின்கம்பம் உடைந்து விழுந்தால், மின்விபத்து ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, உத்திரமேரூர் மின்வாரியம் சார்பில், சேதமடைந்த இரு மின்கம்பங்களும் அகற்றப்பட்டு, புதிய கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.