PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

மேலுார்: கீழையூர் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் தக்கல் இலவச மின் இணைப்புக்கு தலா ரூ.3 லட்சம் பெற்று மின் இணைப்பு கொடுத்தனர். முறையான அனுமதி இல்லை எனக்கூறி ஜூன் 7 ல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் செயற்பொறியாளர் கண்ணன், உதவி இயக்குநர் சந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விசாரித்தனர். முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.